search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி மீது அரிவாள் வெட்டு"

    களக்காடு அருகே விவசாயியை வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தியை சேர்ந்தவர் பழனி (வயது 45). விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த துரைகுட்டி (30), செல்வம் (21), கார்த்திக் (23), சுடலைமுத்து (24). இவர்கள் 4 பேரும்  இரவில் தெருவில் நின்று கொண்டு பெண்கள், குழந்தைகள் மீது கற்களை வீசினார்களாம். இதனை பழனி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் பழனியை அரிவாளால் வெட்டினர். இதில் அவரது இடது கை நடுவிரல் துண்டானது. 

    மேலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கொலை முயற்சி வழக்குபதிந்து விசாரணை நடத்தி துரைகுட்டியை கைது செய்தனர். செல்வம், கார்த்திக், சுடலைமுத்து ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
    ×