என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விவசாயி மீது அரிவாள் வெட்டு
நீங்கள் தேடியது "விவசாயி மீது அரிவாள் வெட்டு"
களக்காடு அருகே விவசாயியை வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தியை சேர்ந்தவர் பழனி (வயது 45). விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த துரைகுட்டி (30), செல்வம் (21), கார்த்திக் (23), சுடலைமுத்து (24). இவர்கள் 4 பேரும் இரவில் தெருவில் நின்று கொண்டு பெண்கள், குழந்தைகள் மீது கற்களை வீசினார்களாம். இதனை பழனி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் பழனியை அரிவாளால் வெட்டினர். இதில் அவரது இடது கை நடுவிரல் துண்டானது.
மேலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கொலை முயற்சி வழக்குபதிந்து விசாரணை நடத்தி துரைகுட்டியை கைது செய்தனர். செல்வம், கார்த்திக், சுடலைமுத்து ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X